யாழ் உணவகங்களில் இப்படியும் சீர்கேடுகளா?

518

யாழ் உணவகங்களில்..

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் செயலணி என்பன இணைந்து உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது நேற்று திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனை நடவடிக்கையின் போது 15 உணவகங்கள் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 9 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பல உணவகங்கள் வெளி தோற்றத்தில் அழகாக காணப்படுவதாகவும் பின் பகுதி சுகாதார சீர்கேடுகளுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

4 மருந்தகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2 மருந்தகங்களில் தகுதியற்ற மருந்து வழங்குனர்கள் சேவையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாணத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த சோதனை நடவடிக்கள் தொடரும்.

தகுதியற்ற உணவங்கள் காணப்படின் மக்கள் ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9375 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.