மல்வத்து ஓயா தந்திரிமலை நீர்தேக்கத்திற்கான அடிக்கல் பிரதமரால் நாட்டி வைப்பு!!

541

மல்வத்து ஓயா தந்திரிமலை

கீழ் மல்வத்து ஓயா தந்திரிமலை நீர்த்தேக்க நிர்மாணத்திற்கான அடிக்கல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் நாட்டப்பட்டதுடன், நினைவுக் கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

நேற்றையதினம் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வழங்கள் அமைச்சர் ஹரிசன் தலைமையில் தந்திரிமலையில் நடைபெற்ற நிகழ்வின் போதே பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட குறித்த திட்டம் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி தற்போது நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இதற்கு 2290 கோடி ரூபாய் நிதி ஓதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவி கருணாநாயக்க, சந்திராணி பண்டார, கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, வசந்த அலுவிகார, பாலித ரங்கே பண்டார, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க,

பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், சந்திம கமகே, பௌத்த மதகுருமார், கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.