அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவி ம ரணம் : இருவர் கைது!!

595

இருவர் கைது

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கை மாணவி ஒருவர் உ யிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்களை அந்த நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் டென்டன்ஓங் பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monash பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற இலங்கையை சேர்ந்த 20 வயதான நிசாலி பெரேரா என்ற மாணவியே இந்த விபத்தில் உ யிரிழந்திருந்தார். மாணவியை மோதி விபத்துக்குள்ளாக்கியதுடன், அந்த இடத்திலிருந்து சந்தேகநபர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

குறித்த மாணவியை வீதியை கடக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் கறுப்பு நிறத்திலான காரொன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த வாகனம் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரின் புகைப்படங்களை அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை டென்டன்ஓங் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.