ஏ9 வீதியில் கோர விபத்து : மகிந்த ராஜபக்சவின் செயற்பாட்டாளர் ஸ்தலத்திலேயே பலி!!

663

கோர விபத்து

முல்லைத்தீவில், மாங்குளம் பொலிஸ் பிரிவின் முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே ப லியாகியுள்ளார்.

குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.40 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான வீதிக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த பேருந்தும் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் காரை செலுத்திய சாரதியே சம்பவ இடத்தில் உ யிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தராஜபக்சவின் செயற்பாட்டாளராக இருந்த தீபன் என அழைக்கப்படும் லண்டன் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் ச டலம் பல்வேறு சிரமங்களின் மத்தியில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் சாரதி தவிர்ந்து வேறு எவரும் பயணித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.