கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் விபத்து : 3 பிள்ளைகளின் தந்தை பலி!!

661

விபத்து

கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனத்தில் வைத்து குறித்தநபர் வாகன சாரதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கிய அந்நபர், வாகனத்தின் சில்லில் சிக்குண்டமையினால் உ யிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.

இந்நிலையில் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். உ யிரிழந்தவர் முரசுமோட்டை, ஐயன்கோவிலடி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அல்வின் அனுரா என்பவர் எனத் தெரியவந்துள்ளது.

இவரது ச டலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.