அடுத்த 24 மணித்தியாலத்திற்கு வடமாகாணத்தில் கடும் மழை!!

518

கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறானது மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தென்படுவதாகவும், அத்துடன் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.