ஆசியாவின் மிகப்பெரும் அதிசயம்

தெற்காசியாவின் மிக உயரமான கட்டடமான தாமரை கோபுரம் உத்தியோகபூர்வமாக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

தாமரை கோபுரம் தொடர்பான முத்திரை வெளியிட்டு வைக்கும் வைபவம் தற்போது இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

350 மீற்றர் உயரமாக இந்த கோபுரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கை கடந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சீன உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்தில் பல வியப்புகளை ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




