இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

453

விபத்து

அக்கரைப்பற்று, ஒலுவில் பிரதான வீதியில் இரு மோட்டார்சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் படுகாயமடைந்த இருவர் பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்றிலிருந்து நிந்தவூர் நோக்கி சென்ற மோட்டார்சைக்கிள் அதே திசையில் சென்ற மற்றுமொரு மோட்டார்சைக்கிளை கடந்து திடீரென சமிக்ஞை விளக்கின்றி வளைவொன்றில் திருப்ப முற்பட்டுள்ளது.

இதனால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.