கொந்தளிப்பான நிலையில் அலைகள்

கடந்த சில தினங்களாக இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் கடற்பகுதிகளில் காற்று வீசும் திசையில் மாற்றம், நீரோட்ட ஏற்பட்டுள்ள திசை மாற்றம் மற்றும் கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக அதிக குளிர்ச்சியாக காணப்படும் தன்மை என்பன காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடல் அலைகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் நிலையில் காணப்படுவதும் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதில் சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இவ்வாறான காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு ஏற்படுவதினாலும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




