ஐந்து கோடி பெறுமதியான 10 கிலோ தங்க நகை கொள்ளை : நால்வர் கைது!!

700

தங்க நகை கொ ள்ளை

தலாத்துஓயா, கல்தென்ன பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் பணமும், தங்க நகைகளும் கொ ள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். குறித்த அனைவரும் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டதாகவும், 50 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கநகைகள் கொ ள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முனதினம் அதிகாலை 3.45 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த 06 பேர், தேவாலயத்தில் இருந்தவர்களை அ ச்சுறுத்தி, கை, கா ல்களை க ட்டி 400,000 ரூபா பணம் மற்றும் 10 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய தங்கநகைகளை கொ ள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, வீதியின் இரு மருங்கிலும் இருந்த கண்காணிப்பு கெமராக்களின் உதவியுடன் மற்றும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் முச்சக்கரவண்டியை பொலிஸார் கண்டுபித்தனர்.

இதன் அடிப்படையிலான தகவலைக் கொண்டு தி ருடப்பட்ட தங்கநகைகளுடன் 04 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.