பொதுமக்கள் செய்த செயல்

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகட்டு கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள குறிசுட்டகுளம் இன்று பொதுமக்களின் உதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டது.

வறட்சியை அதிகளவில் எதிர்நோக்கி கொண்டிருக்கும் இக் கிராம மக்கள் தங்களுடைய கிராமத்தின் வறட்சியை போக்கும் நோக்கோடு கிராம சேவையாளர் இராதாகிருஸ்ணன் வழிகாட்டலின் கீழ் கிராம அமைப்புக்கள், பெண்கள் அமைப்பினர் இணைந்து தமது முழு முயற்சியோடு இச் செயற்பாட்டினை வெற்றிகரமாக செயற்படுத்தி குளத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

தற்போது கிராம மக்களின் உதவியினால் குறிசுட்டகுளம் நீர் தேக்கி வைக்குமளவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இக்குளம் பல வருடங்களாக அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கினால் புனரமைக்கப்படாமலும் பாவனைக்குதவாமலும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





