மோட்டார் சைக்கில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!

553

மோட்டார் சைக்கில் விபத்தில்

மட்டக்களப்பு, செங்கலடி – பதுளை நெடுஞ்சாலையின் முதிரையடி ஏற்றம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உ யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் செங்கலடி, அம்மன்புரம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மனோராஜ் (வயது 26) என்பவரே உ யிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செங்கலடி அம்மன்புரத்திலிருந்து கார்மலையிலுள்ள தனது மாட்டு பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞர் சென்றவேளை கித்துள் கிராமத்திலிருந்து செங்கலடி நோக்கி வந்த டிப்பர் ரக வாகனம் முதிரையடி ஏற்றம் பகுதியில் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் உ யிரிழந்த இளைஞனின் ச டலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.