வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 20 மாணவர்கள் சித்தி!!

1035

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் (06.10.2019)  வெளியாகியுள்ள நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் 20  மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் டேனுஷா சுதாகரன் என்னும் மாணவி 187 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

பாடசாலையில் 108 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 70  புள்ளிகளுக்கு மேல் பெற்று  94% வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.