பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்ததனால் வீடு சேதம்!!

539

பலத்த காற்றினால்..

நுவரெலியா – லிந்துலை, இராணிவத்தை பேரம் தோட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக அப்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் பெய்த கடும் மழையுடன் கூடிய பலத்த காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால், அங்கிருந்த வீடு ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமாகியுள்ளது.

இச் சம்பவத்தின் போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், மேற்படி மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டிருந்தனர்.