வீதி விபத்தில் மூவர் காயம்!!

562

மூவர் கா யம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு பகுதியில் முச்சக்கரவண்டியொன்று பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில், விபத்தில் மூன்று பேர் கா.யமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கா யமடைந்த மூவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனில் இருந்து குடாகம பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே அதிக வேகம் காரணமாக 25 அடி பள்ளத்தில் குடைசாய்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.