யாழில்..
யாழ்ப்பாணம் – கைதடி, நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார். குறித்த விபத்தின் போது குருநகர், கனகசிங்கம் வீதியை சேர்ந்த எம்.லக்கி எனும் (42) வயதுடைய ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை டிப்பர் வாகனமொன்று மோதித் தள்ளியதிலேயே இந்த அ னர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் ப டுகாயமடைந்ததும், 119 அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்தபோதும், நோ யாளர் காவு வண்டி சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லையென பொது மக்கள் கு ற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் குறித்த வீதியில் சென்ற வாகனங்களை மறித்து உதவிகோர முயன்றபோதும், உதவ யாரும் முன் வரவில்லை எனவும், நீண்ட நேரத்தின் பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் அவர் உ யிரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.