மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள் : சஜித் பிரேமதாச முன்னிலை!!

205

மன்னார் தேர்தல் தொகுதி

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது வன்னி மாவட்ட மன்னார் தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இதன்படி வன்னி மாவட்டத்திற்கான மன்னார் தொகுதிகளுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. வன்னி மாவட்ட மன்னார் தேர்தல் தொகுதி வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.

அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 53602 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தபாய ராஜபக்ஷ 6435 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 180 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 378 வாக்குகளையும், எம்.எச்.எம்.ஹிஸ்புல்லா 150 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 64102 வாக்குகள் பதிவாகியுள்ளதுடன் அதில் 837 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.செல்லுபடியான வாக்குகள் 63265 ஆகும்