பாடசாலை மாணவர்களுக்கு..

நாட்டில் உள்ள அரச பாடசாலைகள் எதிர்வரும் 29ஆம் திகதி மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக 2020ஆம் வருடம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில், க.பொ.த சாதாரணதர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




