மட்டக்களப்பில் கடும் மழை : போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்!!

470

மட்டக்களப்பில் கடும் மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் சில பகுதிகளில் போக்குவரத்துகளும் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பிரதான குளங்களிலும் நீர்நிலைகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் வீதிகளின் மேலாக நீரோட்டம் காரணமாக போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

செங்கலடி – பதுளை பிரதான வீதியில் கித்துள் பகுதி வீதியின் மேலாக வெள்ளநீர் செல்வதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.