15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச்சென்று பலாத்காரம் செய்த சகோதரர்கள்!!

579

Abuseஉறவுக்கார சகோதரர்கள் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 15 வயது பாடசாலை மாணவி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் – அளுத்வெவ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் பகல் அரிசி இடிக்கச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை இடையில் வழிமறித்த சகோதரர்கள், பலாத்காரமாக அவரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றையவர் தப்பிச் சென்றுள்ளார். சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.