தை மாத ராசி பலன்கள் – சிம்மம்!!

409

simmam

வானத்தில் பறந்தாலும் பூமியில் திரியும் கோழியை குறி வைக்கும் பருந்தைப்போல் எப்போதும் லட்சியத்தை விட்டு விலகாதவர்களே, சுதந்திர தாகம் உடைய நீங்கள், அதிகாரத்திற்கு அஞ்ச மாட்டீர்கள். கடந்த ஒரு மாத காலமாக 6ம் வீட்டில் அமர்ந்திருந்த சுக்கிரனும். 5ம் வீட்டில் நின்றிருந்த சூரியனும் உங்களை நிம்மதியில்லாமல் செய்தார்கள். எங்கு சென்றாலும் எதிர்ப்புகளும், இழப்புகளும், ஏமாற்றங்களையும் சந்தித்தீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் போனது. குடும்பத்திலும் பிரச்னைகள் வந்தது.

ஆனால் அப்படி உங்களை அவஸ்தைப்படுத்திய உங்கள் ராசிநாதன் சூரியன் 6ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க நீடிப்பதால் சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுக்கிரன் வக்ரமானாலும் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மகனுக்கு இருந்து வந்த கோபம் குறையும். வாகனப்பழுது நீங்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 2ம் வீட்டில் நிற்பதால் பணத் தட்டுப்பாடு அதிகமாகும். யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் வலுவாக நிற்பதால் உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு, மனை அமையும்.

அரசியல்வாதிகளே தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். மாணவர்களே உங்களுடைய நினைவாற்றல் கூடும். தேர்வுகளில் மதிப்பெண் அதிகரிக்கும். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கன்னிப் பெண்களே காதல் பிரச்னையால் துவண்டிருந்த நீங்கள் தெளிவாவீர்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் சேருவீர்கள்.

ராகுவும், சனியும் 3ம் வீட்டில் நீடிப்பதால் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். புதிதாக முதலீடுகள் செய்வீர்கள். பெரிய திட்டங்கள் நிறைவேறும். புத்த மதம் பரவியிருக்கும் நாடுகளால் ஆதாயமடைவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலர் அதிக பரப்பளவுள்ள இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பங்குதாரர்கள் வளைந்து கொடுப்பார்கள். வேலையாட்களும் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் நிலவி வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். கௌரவக் குறைவான சம்பவங்களெல்லாம் நீங்கும். இழந்த மரியாதையை மீண்டும் பெறுவீர்கள். இழந்த சலுகைகளும் கிடைக்கும். இடமாற்றம் திருப்திகரமாக இருக்கும். புது வேலைக்கும் முயற்சி செய்வீர்கள். புது வேலையும் சாதகமாக அமையும்.

விவசாயிகளே கரும்பு மற்றும் மரப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். நிலத்தகராறு சுமுகமாகும். கலைத்து றையினரே முடங்கிக் கிடந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். அதிரடித் திட்டங்கள் தீட்டி அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் மாதமிது.

ராசியான திகதிகள்:
ஜனவரி : 14, 22, 23, 24, 25, 30, 31
பெப்ரவரி : 1, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: பெப்ரவரி 3, 4 மற்றும் 5ந் திகதி காலை 10 மணி வரை எதிர்பார்த்தவை தாமதமாக முடியும்.

பரிகாரம் : அம்பிகையை தரிசித்து வாருங்கள். தந்தை இழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.