தை மாத ராசி பலன்கள் – கும்பம்!!

459

kumbam

கடமை உணர்வு கொண்ட நீங்கள் காதல் வசப்படுபவர்கள். பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளரமாட்டீர்கள். கடந்தகால அனுபவங்களை மறக்காமல் வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வதில் வல்லவர்கள் நீங்கள்தான். உங்களின் பிரபல யோகாதிபதி வக்ரமானாலும் லாப வீட்டில் நிற்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. சுக்கிரன் வக்ரமாகி நிற்பதால் தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். மறதியால் நகைகள் மற்றும் வீட்டுப் பத்திரங்களை இழந்து விடாதீர்கள்.

சூரியனும், புதனும் 12ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நட்பு வட்டம் விரியும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தந்தைவழி சொத்துக்களிலிருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 8ம் வீட்டில் செவ்வாய் மறைந்திருப்பதால் இரவுப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகள் தகுந்த ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம். தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப் பாருங்கள். மாணவர்கள் தேர்வு நேரம் நெருங்கிவிட்டது.
படிப்பில் கவனம் செலுத்துங்கள். டி.வி. முன்னால் அதிக நேரம் உட்காராதீர்கள். சின்னச் சின்ன உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அரட்டைப் பேச்சை கு றைக்கப் பாருங்கள்.

கன்னிப் பெண்கள் வீட்டில் உள்ளவர்கள் சின்னச் சின்ன அறிவுரை கூறினால் ஏற்றுக் கொள்ளுங்கள். எல்லாம் எனக்குத் தெரியும். நான் என்ன சின்னப் பெண்ணா என்றெல்லாம் மறுத்துப் பேசிக் கொண்டிருக்காதீர்கள். புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். திருமணத் தடைகள் நீங்கும்.

மூன்றாம் வீட்டிலேயே கேது நிற்பதால் வியாபாரத்தில் தைரியமாக புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். புது முதலீடுகளும் வரும். உதவிகளும் கிடைக்கும். தானியம், கெமிக்கல், மார்க்கெட்டிங் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும். வேலையாட்கள் உங்களின் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள்.

உத்யோகத்தில் அலைச்சல்களும், வேலைச் சுமையும் அதிகமாகிக் கொண்டே போகும். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு அச்சமும் இருக்கும். குரு சாதகமாக இருப்பதால் உத்யோகத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள், அவமானங்களையெல்லாம் கடந்து வெற்றி பெறுவீர்கள்.
மாதத்தின் பிற்பகுதியில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

கலைத்துறையினர் பெரிய வாய்ப்புகள் வரும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். விவசாயிகள் மகசூல் பெருகும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். அரசு நலத் திட்டங்களையும் சரியாகப் பயன்படுத்தி கூடுதல் வருமானம் பெறுவீர்கள். கஷ்டப்பட்டாலும் காரியத்தை கச்சிதமாக முடிக்கும் மாதமிது.

ராசியான திகதிகள்:
ஜனவரி : 16, 17, 18, 19, 20, 26, 27, 28, 29
பெப்ரவரி : 5, 6, 7, 9.

சந்திராஷ்டம தினங்கள் : ஜனவரி 21, 22 மற்றும் 23ம் திகதி நண்பகல் 12 மணி வரை புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

பரிகாரம் : அம்மனை தரிசித்து வாருங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.