நித்தியானந்தாவுடன் யாழ் நல்லை ஆதீனத்திற்கு தொடர்பா : ஆதீன குருமுதல்வர் விளக்கம்!!

561

நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவுடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

ச ர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது முகநூலில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தனது அடுத்து இலக்கு இலங்கையில் உள்ள நல்லை ஆதீனம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்த வெளியிட்டுள்ள நல்லை ஆதீன குருமுதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இதனை நாம் ச ர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். சுவாமி நித்தியானந்தாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை. எமது இந்து மதப் பணிகளுக்கு இ டையூறு வரும் வகையிலும் எமக்கு கு டைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.