சாவகச்சேரியில்..

சாவகச்சேரி – சங்கத்தானைப் பகுதியில் ரயில் பாதையைக் கடக்க முயற்சித்த கார் மீது, ரயில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

பொறுப்பற்ற விதமாக ரயில் கடவையை கடக்க முயற்சித்த நிலையில் கொழும்பிலிருந்து வந்த ரயில் மோதியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




