தியாகம் செய்த பெண்

இரண்டு வயது குழந்தை ஒன்று சிறுநீரக பி ரச்சினையால் பா திக்கப்பட்டு இன்னும் சில மாதங்களே உ யிர் வாழ்வாள் என கூறப்பட்ட நிலையில், முன் பின் தெரியாத பெண் ஒருவர் அந்த குழந்தைக்கு சிறுநீரகம் தா னம் செய்து அவரது உ யிரைக் கா ப்பாற்றியிருக்கிறார்.

Newcastleஐச் சேர்ந்த Joety and Amrik Kandola தம்பதியின் மகள் Anaya. குறைபிரசவத்தில் பிறந்த Anayaவுக்கு ஒரு குறிப்பிட்ட நோ ய் ஏற்பட்டு அவளது சிறுநீரகங்கள் பா திக்கப்பட்டன.

மருத்துவர்கள் அவள் இன்னும் சில மாதங்களே உயிர் வாழ்வாள் என்று கூறிவிட, அவளை இ ழக்க மனமில்லாத அவளது பெற்றோர், தங்கள் சிறுநீரகம் அவளுக்கு பொருந்தததால், சிறுநீரக தானம் கோரி பேஸ்புக்கில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்த கோரிக்கை சீக்கியரான Surinder Sapal (36) கண்களில் பட, இரண்டு குழந்தைகளின் தாயான அவர் கண்களுக்கு, Anaya தனது மூன்றாவது குழந்தையாகத்தான் தெரிந்திருக்கிறாள். உடனே Anayaவின் பெற்றோரை அவர் தொடர்புகொள்ள, மருத்துவர்கள் அவரது சிறுநீரகம் Anayaவுக்கு பொருந்துமா என சோ தித்திருக்கிறார்கள்.

அது பொருந்துகிறது என்பது கண்டறியப்பட்டதோடு, 100,000இல் ஒருவர்தான் Anayaவுக்கு பொருத்தமாக இருக்க முடியும் என்பதும், அந்த ஒருவர் Surinder என்பதும் தெரியவந்துள்ளது. Surinder தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்ய, அ றுவை சி கிச்சை மேற்கொள்ளப்பட்டு Anaya நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறாள். Anayaவின் பெற்றோர் Surinderஐ ஒரு ஹீரோ என்று கூறினால் கூட போதாது, அவர் ஒரு சூப்பர் ஹீரோ என்கின்றனர் கண் க லங்க.

ஆனால், தன் ஹீரோ எல்லம் இல்லை என்று கூறும் Surinder, எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஒரு பி ரச்சினை ஏற்பட்டு, என்னால் உதவ முடியாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று மட்டுமே ஒரு தாயாக என்னால் எண்ண முடிந்தது என்கிறார்.




