க.பொ.த உயர்தரப் பரீட்சை

2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்திற்கு பிறகு வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரால் இன்றைய தினம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே பெறுபேறுகள் நத்தார் பண்டிகைக்கு பின் வெளியிடப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




