என் மகளை விட்டுவிடுங்கள் : சவுரவ் கங்குலி!!

548

சவுரவ் கங்குலி

தனது மகள் இந்திய குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எ திராக வெளியிட்ட பதிவு குறித்து சவுரவ் கங்குலி தனது மகளை விட்டுவிடும்படி பதிவிட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலியின் மகள் சனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய குரியுரிமை திருத்த சட்டம் குறித்து பதிவிட்டிருந்தார். அதில் குஷ்வந்த் சிங் எழுதிய “தி எண்ட் ஆஃப் இந்தியா” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகளை அவர் பயன்படுத்தியிருந்தார்.

அதில் “தான் முஸ்லீம் இல்லை, கிறிஸ்துவன் இல்லை என்பதால் தங்களை பா துகாப்பாக உணரும் நபர்களே நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் குறி நாளை உங்களை நோக்கி பாயும். உங்களையும் அ டக்குமுறைக்குள் உட்படுத்துவர்கள்.

இறச்சி உண்ணக்கூடாது, ம து அ ருந்தகூடாது, வெளிநாட்டு படங்கள் கூட பார்க்ககூடாது. அவர்கள் சொல்லும் பற்பசை பயன்படுத்த வேண்டும்.

பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்த கொடுக்கப்படும் முத்தம், கைகுலுக்கலுக்கு பதில் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். யாரும் இங்கு பா துகாப்பாக இல்லை. இந்தியாவை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள அனைவரும் இதை உணர வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக போ ராட்டம் வலுக்கும் சூழலில், சனா கங்குலியின் இந்த பதிவு அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது.

இந்நிலையில், தனது மகளின் பதிவு குறித்து கங்குலி டுவிட் செய்துள்ளார். அதில் “ இந்த பி ரச்னைகளில் இருந்து சனாவை விட்டுவிடுங்கள். பதிவு உண்மையில்லை. அவள் இளம் பெண். அவளுக்கு அரசியலைப்பு பற்றி எதுவும் தெரியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.