பேராயர் தலைமையில் இடம்பெற்ற நத்தார் திருப்பலியில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவங்கள்!!

557

நத்தார் திருப்பலி

உலகம் முழுவதும் இன்று நத்தார் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு நத்தார் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கையிலும் நத்தார் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில், இன்று நள்ளிரவு நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருப்பலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 21ம் திகதி வெ டிப்பு சம்பவம் இடம்பெற்ற நீர்கொழும்பு கட்டுவாபிட்டி தேவாலயத்தில் கொழும்பு பேராயர் அதிவணக்கத்துக்குரிய மெல்கம் ரஞ்சித் அவர்கள் தலைமையில் விசேட திருப்பலி நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பா திக்கப்பட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். குறிப்பாக சம்பவத்தில் இருந்து இன்னுமும் மீள முடியாத நிலையிலிருந்த பலரும் இன்றைய விசேட திருப்பலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இது அங்கிருந்த பலரின் மத்தியிலும் ஒரு நெகிழ்வான சம்பவமாக பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.