அம்மா எங்கே? பிரிவால் வாடும் குழந்தை : போ ராட்டத்தில் கைதான பெற்றோர் : உணர்ச்சிகர சம்பவம்!!

473

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போ ராட்டத்தில் ஒன்றரை வயது குழந்தையின் பெற்றோர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஏக்தா சேகர் மற்றும் ரவி சேகர், இவர்களது ஒன்றரை வயது குழந்தை ஆர்யா.

வாரணாசியில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எ திராக நடந்த போ ராட்டத்தில் இவர்கள் கலந்து கொண்டதால் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு குழந்தை தற்போது ரவியின் சகோதரர் சசிகாந்த் மற்றும் தெபத்ரிதா ஆகியோரின் பராமரிப்பில் இருந்த வருகிறார்.
இதுகுறித்து தெபத்ரிதா அளித்த பேட்டியில், தனது பெற்றோர் கைதான நாளில் இருந்தே ஆர்யா எங்களுடன் இருக்கிறாள்.

தனது அம்மாவையும், அப்பாவையும் தே டிக் கொண்டிருக்கிறாள் என தெரிவித்துள்ளார்.

இருவரையும் ஜா மீனில் வெளியே எடுக்க மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் ஜனவரி 1-ம் தேதி உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது என்று சசிகாந்த் உருகத்துடன் கூறியுள்ளார்.

தன்னுடைய அப்பா அம்மாவின் புகைப்படத்தை மொபைலில் பார்த்துவிட்டு எங்களைப் பார்க்கும்போது அம்மா எங்கே ? என்று கேட்பதுபோல் உள்ளதாக சோகத்துடன் கூறியுள்ளார் ரவியின் சகோதரர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.