வெளிநாட்டில் துடிதுடித்து உ யிரிழந்த இளைஞர்கள் : ஊருக்கு முன்பதிவு செய்த விமானத்தில் வந்த ச டலம்!!

636

விமானத்தில் வந்த ச டலம்..

இந்தியாவை சேர்ந்த இரு இளைஞர்கள் வெளிநாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்ற போது உ யிரிழந்த நிலையில் அவர்களின் ச டலங்கள் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்துள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள் சரத்குமார் (21) மற்றும் ரோகித் கிருஷ்ணகுமார் (19). இதில் சரத்குமார் அமெரிக்காவில் தங்கி படித்து வந்தார், அதே போல ரோகித் பிரித்தானியாவின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தில் மருத்துவம் படித்து வந்தார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தங்கள் வீடு அமைந்திருக்கும் துபாய்க்கு சரத்குமாரும், ரோகித்தும் சென்றனர்.

கடந்த 25ஆம் திகதி ரோகித்தை தனது காரில் ஏற்றி கொண்டு சரத்குமார் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் நடைபாதையை இடித்து கொண்டு பின்னர் பயங்கர வேகத்தில் மரத்தின் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் சரத்குமார் மற்றும் ரோகித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே து டிது டித்து உ யிரிழந்தனர்.

இந்நிலையில் கேரளாவுக்கு வியாழன் அன்று தனது தாய் மற்றும் பாட்டியுடன் வருவதற்கு சரத்குமார் விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரின் ச டலம் தான் விமானம் மூலம் ஊருக்கு வந்தடைந்தது.

அதே போல ரோகித்தின் ச டலம் இன்று காலை விமானம் மூலம் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டது. இருவரும் சடலங்களுக்கும் இன்றே இ றுதிச்சடங்கு நடக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.