வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களுக்காக வருகிறது புதிய நடைமுறை!!

1069

சாரதி அனுமதிப் பத்திரம்..

வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை விநியோகிப்பதற்காக SMS தொழிநுட்பத்தை பயன்படுத்த மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் அதனை பூரணப்படுத்தி மீண்டும் வழங்குவதற்கான குறிப்பிட்ட நேரத்தை விண்ணப்பதாரருக்கு SMS மூலமாக அறிவிப்பதற்கு இந்த வேலைத்திட்டத்தின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் உபாலி ஜயசேகர தகவல் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், திணைக்களத்தின் தொழிநுட்ப பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த புதிய நடவடிக்கையை 2 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையுள்ள விண்ணப்பதாரர் தமது விண்ணப்ப படிவத்தை கையளித்தால் எமது அதிகாரிகள் 2 மணித்தியாலத்திற்கு பின் வருமாறு கூறுகின்றனர்.

இருப்பினும் சில சந்தர்ப்பத்தில் கால தாமதம் ஆவதினால் இந்த புதிய முறை ஊடாக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிக்கப்பட்ட பின் அது குறித்து SMS ஊடாக அவருக்கு அறிவிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.