இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

899

அவசர எச்சரிக்கை

அண்மைக்காலமாக இலங்கையர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வெளிநாட்டு தவறிய அழைப்புகள் (Missed call) பாரியளவு கிடைப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு இவ்வாறான தவறிய அழைப்புகள் வருவது அதிகரித்துள்ளது.

பாவனையாளர்களுக்கு அறிமுகமில்லாத இலங்கை தொலைபேசி இலக்கங்களில் இருந்து பல்வேறு வகையான குறுந்தகவல்கள் கிடைப்பதாக தெரியவந்துள்ளதென தொழில்நுட்ப சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கையடக்க தொலைபேசி பயனாளர்கள் பெறுமதியான பரிசு வென்றுள்ளதாகவும், பரிசினை பெற ஒரு பணத்தொகையை செலுத்த வேண்டும் என குறும்தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

இவ்வாறு மோ சடியான முறையில் வரும் குறுந்தகவல்கள் குறித்து மிகவும் அவதானத்துடன் மக்கள் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறுந்தகவல்களில் கோரும் தனிப்பட்ட தகவல்கள் எதனையும் வழங்க வேண்டாம் எனவும், அவர்கள் வழங்கும் வங்கி கணக்கு இலக்கத்திற்கோ அல்லது bitcoin walletஇற்கு பணத்தை வழங்க வேண்டாம் என இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டிலிருந்து பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் ஊடாக Missed call வருவதாகவும், அந்த இலக்கத்திற்கு மீண்டும் தொடர்பு கொண்டால் பெருமளவு பணம் பறிமுதல் செய்யப்படுவதுடன் தனிப்பட்ட தரவுகளும் திருடப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.