புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து : ஸ்தலத்தில் ப லியான இளைஞர்கள்!!

552

புத்தாண்டு தினத்தில்..

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உ யிரிழந்துள்ளனர்.

தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றி வந்த லொறி கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறியை விநியோகித்து விட்டு திரும்பி வருகின்ற வேளை எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த லொறியுடன் மோதியதில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உ யிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்த 23 வயதுடைய வரதராஜா ஜெமினன் மற்றும் யாழ்ப்பாணம் செட்டியார் மடம் அராலி மேற்கைச் சேர்ந்த 29 வயதுடைய செல்வநாயகம் அஜிந்தன் ஆகிய இருவருமே உ யிரிழந்துள்ளனர்.

உ யிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.