கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் அதிரடியாக கைது!!

653

விமான நிலையத்தில்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்கள் தொகை ஒன்றை அபுதாபியில் இருந்து ச ட்டவிரோதமாக கொண்டுவந்த கு ற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பை சேர்ந்த 28 மற்றும் 38 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைத்தொழிலில் ஈடுபடும் இருவர் என குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் இருவரும் நேற்று காலை அபுதாபியில் இருந்து யூ.எல் – 208 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

அவர்கள் இருவரது பையிலும், 35,98,800 ரூபா மற்றும் 59,980 ரூபா பெறுமதியான சிகரெட்கள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.