கோர விபத்தில் 8 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம்!!

521

கோர விபத்தில்..

புதிய இணைப்பு : பதுளை, பசறை பகுதியில் இன்று(06.01.2020) மாலை ஏற்பட்ட விபத்தில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 50இற்கும் அதிகமானவர்கள் படுகாய மடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 20இற்கும் மேற்பட்டோர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உ யிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு : பதுளை, பசறை பகுதியில் சற்று முன்னர் பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் ஏழு பேர் உ யிரிழந்ததுடன் மேலும் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

பதுளை பசறை மடுல்சீமை பிரதான சாலையில் 6 வது மைல் போஸ்டில் பயணிகள் பேருந்து ஒரு செங்குத்துப்பாதையில் விழுந்ததிலேயே இவ்வாறான உ யிர்ச்சேத ங்கள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

500 அடி பள்ளத்தில் பேருந்து பாய்ந்ததால் உ யிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.