யாழ் வல்வை பட்டப் போட்டியில் 5 வருடங்களாக முதலிடத்தை பெற்று சாதனை படைத்த இளைஞன் : குவியும் வாழ்த்துக்கள்!!

610

மகேந்திரன் பிரஷாந்

வல்வை பட்டத் திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டிய மகேந்திரன் பிரஷாந்திற்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன.

இம்முறையும் 1,2,3 இடங்களை பிரஷாந் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வல்வை மண்ணையும், வடமராட்சி மண்ணின் பெருமையையும் பறைசாற்றும் சாதனையை படைத்துள்ளார்.

பிரசாந் அவர்களின் பட்டத்தை பார்த்த பல்லாயிரகணக்கான மக்களுக்கு ஆச்சரியத்தையும் வியப்பை தந்துள்ளது. அவரின் அபார திறமையால் தொடர்ந்து 5 வருடமாக முதலிடத்தை பெற்றுள்ளது என்பது மிகவும் சிறப்பான விடயமாகும்.

வல்வெட்டித்துறை மண்ணுக்கு பெருமை தேடித்தந்த மகேந்திரன் பிரசாந் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வாழ்த்துவது சுலபம். ஆனால், இவ் பட்டத்தை உருவாக்கும் செலவும், நுட்பமுறையும் இங்கு முதலிடத்தை பெற்றுள்ளது என்பது தான் உண்மை.