வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பரிதாபமாக பலி!!

685

விபத்தில்..

வவுனியா ஓமந்தை மத்தியகல்லூரி உயர்தர மாணவன் ஒருவர் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்தில் அகப்பட்டு நசியுண்டு பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று(29.01.2020) மாலை விளக்குவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் விளக்குவைத்தகுளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய எஸ்.பானுஜன் என்ற ஓமந்தை மத்திய கல்லூரியின் கலைப்பிரிவு இரண்டாம் வருட மாணவனே உ யிரிழந்துள்ளார்.

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிவிட்டு வீடு சென்ற குறித்த மாணவன், மீண்டும் ஓமந்தைப் பகுதிக்கு சென்ற சமயம் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

மாணவனின் ச டலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.