ஆனந்த கல்லூரி மாணவன் புள் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி பரிதாப மரணம்!!

520

Grassகொழும்பு ஆனந்த கல்லூரியின் 4ம் ஆண்டு மாணவன் ஒருவர் எதிர்பாராத விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கல்லூரியின் மைதானத்தில் புள்ளுவெட்டும் இயந்திரத்தில் அகப்பட்டு சுவரில் இறுகி குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இயந்திரம் கையால் தள்ளி இயக்கப்படும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த 9 வயது மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.