வவுனியா பெண்ணுக்கு கொரோனா வைரஸ் சந்தேகம் : யாழ் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை!!

655

வவுனியா பெண்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சேர்க்கப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த பெண்ணிற்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் நேற்று சேர்க்கப்பட்டார்.

நோயாளியின் குருதி மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன் பரிசோதனை அறிக்கை கிடைக்கும்வரை நாங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி வருகின்றோம்.

எனினும் குருதி மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை வரும் பட்சத்தில் தான் அவருக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்று தொடர்பில் கூறமுடியும் என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

வவுனியாவில் 24 வயதுப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்?

கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் 24வயதுடைய வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் இன்று (05.02.2020) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சமுதாய வைத்திய நிபுனர் வைத்தியர் ஆர்.கேசவன் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வவுனியாவை சேர்ந்த 24வயதுடைய குறித்த பெண் சீனா நாட்டிக்கு கல்விக்காக சென்ற நிலையில் கடந்த 28ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

குறித்த யுவதிக்கு மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் இருந்தமையினால் குறித்த யுவதி சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு இன்று (05.02.2020) காலை சென்று அவரது விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி கொரோனா வைரஸின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரில் இருந்து வெகு தொலைவில் தான் வசித்துள்ளார்.

எனினும் மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் போன்ற விடயங்கள் கோரோனா வைரஸின் அறிகுறிகளாக இருக்கலாம் என்ற அ ச்சத்தில் அவரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட விசேட விடுதியில் தங்கவைக்கப்பட்டு,

வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியசாலையான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாலை 3.00 மணியளவில் நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த யுவதிக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு பின்னரே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளரா?வவுனியாவில் என்ற விடயத்தினை உறுதிப்படுத்த முடியுமென மேலும் தெரிவித்தார்.