இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்!!

705

முக்கிய அறிவித்தல்

அவசியமற்ற வகையில் வெயில் நேரத்தின்போது வெளியில் அலைந்து திரியவேண்டாம் என்று பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர். தேசிய கட்டட ஆராச்சி அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் மிக்க காலநிலையை சுட்டியே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தின்போது மனித உடலை நேரடியாக படும்படி நிற்கவேண்டாம். முடியுமான அளவில் நிழலில் நிற்கவேண்டும் என்று தேசிய கட்டட ஆராச்சி அமைப்பின் பணிப்பாளர் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

உலகின் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்ட காலநிலை மாற்றமே இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கட்டுநாயக்கவில் 35.7 செல்சியஸ் வெப்பம் அளவிடப்பட்டது.

இதேவேளை பாடசாலை மாணவர்களையும் முற்பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3.30 வரை வெயிலில் வைத்திருக்கவேண்டாம் என்று கல்வி அமைச்சு நேற்று அறிவுரை வழங்கியுள்ளது.