திடீரென மரக்கறி சந்தைக்குள் நுழைந்த கோட்டாபய!!

399

ஜனாதிபதி கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மரக்கறி சந்தை ஒன்றுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார். இன்று கலஹா பிரதேசத்தில் மரக்கறி விற்பனை நிலையங்களுக்கு சென்று மரக்கறி விலை அதிகரித்தமைக்கு காரணம் குறித்து ஆராய்ந்தார்.

இதன் போது தங்கள் பிரதேசத்தின் மரக்கறிகள் தம்புள்ளளை நகரத்திற்கு அனுப்பப்படுவதே விலை அதிகரிப்பு காரணம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் உரிய பிரிவினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு விரைவில் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

அண்மைக்காலமாக மரக்கறிகளின் விலைகள் உயர்வடைந்துள்ள நிலையில், அவற்றை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.