சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரத்தில் குவிந்துள்ள 8 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள்!!

746

திருக்கேதீஸ்வரத்தில் குவிந்துள்ள பக்தர்கள்

மன்னார் – திருக்கேதீச்சர ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்று வரும் சிவராத்திரி நிகழ்வில் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு பல நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கேதீஸ்வர ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீச்சர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள், அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து சுமார் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இன்றைய மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.