வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு!!

729

கிணற்றிலிருந்து..

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து இன்று (03.03.2020) குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் மதீனாநகர் பகுதியில் வீட்டுக் கிணறு ஒன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ச டலமாக காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான காண்டீபன் கோமதி வயது (59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உறவினர்கள், வழமைபோன்று நித்திரைக்கு சென்றவரை காலையில் கா ணவில்லை என தேடிய போது கிணற்றினுள் சடலமாக காணப்பட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.