கம்பளையில் தொடர்ச்சியாக இ ளம் யு வதிகளை க டத்திச்செல்லும் நபர் : பின்னணி என்ன!!

630

கம்பளையில்..

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தொடர்ச்சியாக இளம் யுவதிகளை க டத்திச்சென்று வெளியிடங்களில் தொழிலுக்கு அமர்த்தும் பணியில் ஈடுபட்டவர் நேற்றைய தினம் பிடிபட்டுள்ளார்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, லிந்துலை நகரப்பகுதியில் யு வதி ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அதிக சம்பளத்திற்கு வெளியிடங்களில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி க டத்த முற்பட்ட போது குறித்த யுவதியின் பெற்றோர் விழிப்படைந்து லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் லிந்துலை பொலிஸார் குறித்த ச ந்தேக ந பரை யுவதியின் இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் தொலைபேசியில் உரையாடும் போது இவரின் தாயார் அதுபோல் பதிலளித்து சம்பந்தப்பட்ட நபரை வீட்டுக்கு வரவழைத்து பின்னர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளமை தெரியவருகிறது.

தொடர்ந்து சந்தேக நபர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.