யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஒட்டப்பட்டுள்ள எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள்!!

1292

துண்டுப்பிரசுரங்கள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இனந்தெரியாத நபர்களால் எ ச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் இளைஞர் படையணியினர் என்ற பெயரில் குறித்த துண்டுப்பிரசுரம் இன்று ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் உடனடியாக சகலவிதமான சமுதாய சீர்கேடுகளும் நிறுத்தப்பட வேண்டும்.

இளைஞர்கள் மீது பெற்றோர் கூடுதலான கவனம் செலுத்துதல் வேண்டும் இல்லையேல் எவராலும் கா ப்பாற்ற முடியாமல் போகும்.

இங்கு வாய் பேச்சுக்கு இனி எதுவும் இல்லை. ஆனால் செயலில் செய்வதற்கு நிறைய உண்டு.

மக்கள் அனைவரும் நாம் யார்! எமது பண்பாடு கலாசாரம் எது என்று உணர்ந்து எம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டும்.

தமிழர் தேசத்தின் கலை, பண்பாடு, கலாசாரம் மற்றும் சமூக வளர்ச்சி இவற்றை கருத்தில் கொள்ளும் அரசாங்கம் மட்டுமே எமக்கு வேண்டும்.

அதோடு எமது இனத்தின் பண்பாடு கலாசாரத்தை பேணி காப்பது எமது கடமை, உரிமை இனி வரும் காலங்களில் சகலவிதமான சீர்கேடுகள் மற்றும் கு ற்றங்களுக்கு தகுந்த த ண்டனை வழங்கப்படும்.

பெண்கள் மீது கைவைப்பதோ இல்லை மாணவர்களோடு சேட்டை விடுவதோ கடுமையான தண்டனை வழங்கப்படும். தடை கற்கள் உண்டு என்றால் தடை தாண்டும் கால்களும் உண்டு.

இப்படிக்கு தமிழ் இளைஞர் படையணி மண்ணின் மைந்தர்கள், என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.