வைரலாகும் புகைப்படம்

தமிழகத்தின் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் தன் மனைவியுடன் நி ர்வாண சாமியார் முன்பு ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், அது யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

துணை முதல்வரான ஒ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத், தன் மனைவியுடன் நி ர்வாண சாமியார் ஒருவர் முன்பு அமர்ந்து ஆசிர்வாதம் வாங்கிறார் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வைரலானது.

மேலும் அந்த புகைப்படத்தை சிலர், ரவீந்திரநாத்திற்கு சிலர் டேக் செய்திருந்தனர். அதில், அருகில் இருக்கும் அவருடைய மனைவி முகத்தை மூடிக் கொண்டு இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அது ரவீந்திரநாத் கிடையாது என்பது தெரியவந்துள்ளது. உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ரவி ஆவார்.

பாஜகவை சேர்ந்த ரவி, அகோரி சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் தான் ரவீந்திரநாத் என்று தவறுதலாக பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் உருவ ஒற்றுமை காரணமாக நி ர்வாண சாமியாரிடம் ஆசிர்வாதம் பெறுவது தான் என்று தவறாக தகவல்கள் வைரல் செய்யப்படுவதாக ரவீந்திரநாத்தும் விளக்கம் அளித்துள்ளார்.




