வவுனியா வைத்தியசாலையில் கொரோனா என்ற சந்தேகத்தில் ஒருவர் அனுமதி!!

933

கொரோனா வைரஸ்..

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தில் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக கொரனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளாரா என்ற பரிசோதனைக்காகவும்,

மேலதிக சிகிச்சைக்காகவும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட நபர் 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.