கொரோனா அ ச்சத்தில் உறைந்துபோன கண்டி!!

518

கண்டி

கொரோனா வைரஸ் என்கிற அ ச்சம் நாடளாவிய ரீதியில் கடந்த சில தினங்களாக பரவிவருகின்றது. கொழும்பு உட்பட நகர்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் பல்பொருள் அங்காடிச் சந்தைகளில் மக்கள் திரளாக நின்று ஒரு மாதத்திற்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்த சந்தர்ப்பங்களும் காணமுடிந்தது.

இந்நிலையில் உலக பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமும், வழிபாட்டுத் தலமுமாகிய கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகைதருவது சடுதியாகக் குறைந்துவிட்டது.

அதேபோல அதிக சன நெரிசல்வாய்ந்த வர்த்தக வீதிகளில் ஒன்றாகிய கண்டி நகர் வீதிகளும் இன்று வெறிச்சோடியே காணப்பட்டன.