மரணத்தை விற்பனை செய்யவேண்டாம் : அனில் ஜாசிங்க கோரிக்கை!!

658

அனில் ஜாசிங்க கோரிக்கை

வியாபாரத் தளங்களின் உரிமையாளர்கள் சிகரட்டுக்களை விற்பனை செய்யவேண்டாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சிகரட் கொரோனா வைரஸ் மரணங்களுடன் தொடர்புள்ளதாக உள்ளது. அது விற்பனை செய்வது மரணத்தை விற்பனை செய்வது போன்றது. எனவே அதனை விற்பனை செய்வதில் இருந்து விலகியிருக்குமாறு அனில் ஜாசிங்க கேட்டுள்ளார்.

இந்த விடயத்தில் வர்த்தகர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். புகைப்பிடிப்பவர்களுக்கு ஏனையவர்களைள காட்டிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே புகைப்பிடிப்பவர்களும் அதனை உடனடியாக கைவிடவேண்டும் என்றும் அனில் ஜாசிங்க கோரியுள்ளார். இதன் மூலம் தமது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.