கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த 75 வயதான மூதாட்டியை பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூதாட்டி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் 15 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.





